பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

லட்டு


லட்டு


தேவையானப் பொருட்கள்
கடலை மாவு- 2கப்புகள்
அரிசி மாவு- 2 டீஸ்பூன்
சர்க்கரை- 1 1/2கப்புகள்
சோடா மாவு- 1/2 பின்ச்
தண்ணீர்-தேவையான அளவு
கிராம்பு-2
ஏலக்கய்-2
முந்திரி-10
உலர் திராட்சை-10
குங்குமப்பூ- 1 பின்ச்
கல்கண்டு- தேவையான அளவு
நெய்- 1/4 கப்
எண்ணெய்-தேவையான அளவு
செய்முறை:
முதலில் கடலை மாவுடன் அரிசி மாவு,சோடா மாவு இரண்டையும் கலந்து மாவு சலிக்கும் சல்லடையால் சலித்துக்கொள்ள வேண்டும்.பிறகு சிறிது சிறிதாக நீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் காய வைக்க வேண்டும்.எண்ணெய்க்கு மேலாக பூந்தி கரண்டியைப் பிடித்து ஒரு சிறு கரண்டியில் மாவை எடுத்து,பூந்தி கரண்டியில் ஊற்றி லேசாக தேய்க்க வேண்டும்.பூந்தி சிறுசிறு முத்துக்களாக எண்ணெயில் விழும்.பூந்தி சிவந்து போகுமுன் எடுத்து விட வேண்டும்.இவ்வாறு எல்லா மாவையும் பூந்தியாக போட்டு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பாகு காய்ச்சும் விதம்:
ஒரு அடி கனமான பாதிரத்தில் சர்க்கரை எடுத்து அது மூழ்கும் அளவு (1 கப் சர்க்கரைக்கு 1/4 கப் தண்ணீர் போதும்) தண்ணீர் ஊற்றி அடுப்பில் ஏற்ற வேண்டும்.சிறிது நேரத்திலேயே சர்க்கரை கரைந்து தண்ணீர் கொதிக்க ஆரம்பிக்கும்.இந்த நேரத்தில் சிறிது கவனமுடன் இருந்து(பாகில் சிறிது கரண்டியில் எடுத்து ஆள் காட்டி விரலுக்கும் பெரு விரலுக்கும் இடையில் வைத்து 1,2,3 என எண்ணி விரல்களைப் பிரித்தால் இரண்டு விரல்களுக்கிடையே மெல்லிய கம்பியாக வரும்.இதுதான் இளம் கம்பிப் பாகு பதம்) இளம் கம்பி பாகு பதம் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி பூந்தியில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும்.கிளறுவதற்கு மத்தின் அடிப்பகுதியைப் பயன்படுத்தலாம்.அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நெய் ஊற்றிக் காய்ந்ததும் முதலில் முந்திரியைப் போட்டு பொன்னிறமாக வறுத்து,பிறகு திராட்சையை வறுத்து, இரண்டையும் பூந்தியில் கொட்டிக் கிளற வேண்டும். கிராம்பு,ஏலக்கய் பொடித்து போடவும்.குங்குமபூவையும் பூந்தியில் போட்டு நன்றாகக் கலக்கவும்.லேசாக சூடு இருக்கும்போதே உருண்டைகளாக அழுத்தி பிடித்து விடவும். சுவையான வீட்டிலேயே தயரிக்கப்பட்ட லட்டு தயார். சுமார் 15 உருண்டைகள் வரை கிடைக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக