பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

மைசூர் பாக்


மைசூர் பாக்


தேவையானவை:
கடலை மாவு_1 கப்
சர்க்கரை_1 கப்
நெய்_1 கப்
தண்ணீர்_3/4 கப்
செய்முறை:
கடலை மாவை நன்றாக சலித்து எடுத்துக்கொள்ளவும்.ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் அளவிற்கு எண்ணெய் அல்லது நெய் எடுத்துக் கொண்டு சூடாக்கவும். மிதமானத் தீயாக இருக்கட்டும்.அதில் மாவைக் கொட்டி வதக்கவும்.பச்சை வாசனைப் போக நன்றாக வதக்க வேண்டும்.அப்போதுதான் மாவைப் பாகில் சேர்க்கும் போது கட்டித் தட்டாமல் இருக்கும்.
ஒரு அடி கனமான வாணலியில் சர்க்கரை ,தண்ணீர் எடுத்துக்கொண்டு சூடுபடுத்தவும்.மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் நெய்யை எடுத்துக் கொண்டு சூடுபடுத்தவும்.இரண்டிலும் தீ மிதமாக இருக்கட்டும்.இப்போது சர்க்கரை கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்து கொதிக்க ஆரம்பிக்கும்.ஒரு தோசைத் திருப்பியால் கிண்டிக்கொண்டே இருக்கவும்.நீளக் கம்பிப் பாகு பதம் வந்ததும் சிறிது சிறிதாக மாவை பாகில் கொட்டிக் கிளறவும்.(பாகை விரல்களில் எடுத்து உருட்டி விரல்களைப் பிரித்தால் நீளக் கம்பியாக வரும்.)விடாமல் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.மாவு முழுவதும் தீர்ந்த பிறகு சூடான நெய்யை ஒவ்வொரு ஸ்பூனாக எடுத்து கலவையில் ஊற்றிக் கிளறிக்கொண்டே இருக்கவும்.சூடாக நெய்யை ஊற்றும் போது மாவு வெந்து வருவது தெரியும்.வாசனை வந்து வெளுத்து நுரைத்து வாணலியில் ஒட்டாமல் வரும்போது ஒரு துளிக்கும் குறைவாக‌ சோடா உப்பை சேர்த்துக் கிளறி ஒரு நெய் தடவியத் தட்டில் கொட்டி சமப்படுத்தவும்.சிறிது ஆறியதும் தேவையான வடிவத்தில் துண்டுகள் போடவும்.நன்றாக ஆறிய பிறகு ஒரு கண்ணாடி பாட்டிலில் எடுத்து வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக