பக்கங்கள்

செவ்வாய், 11 டிசம்பர், 2012

மாங்காய் ஊறுகாய்


மாங்காய் ஊறுகாய் 


தேவையானவை:
மாங்காய்
உப்பு
செய்முறை:
படத்திலுள்ளதுபோல் எல்லா மாங்காய்களையும் இரண்டு பக்கமும் கீறி வைக்கவும.
பிறகு கீறிய பகுதி நிறைய உப்பை வைத்து அடைத்து வைக்கவும்.இதற்கு உப்பு நிறைய தேவைப்படும். இவ்வாறே எல்லா மாங்காய்களையும் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து மூடவும்.
மூன்றாவது நாள் நல்ல வெயில் விழும் இடத்தில் ஒரு பெரிய தட்டில் ஒவ்வொரு  மாங்காயாக எடுத்து அடுக்கி வைக்கவும்.
இப்போது மாங்காயின் பச்சை நிறம் மாறி மஞ்சள்,ப்ரௌன்,அடுத்து கருப்பு என மாறும்.
பாத்திரத்தில் உப்புநீர் நிறைய இருக்கும்.அதை அப்படியே வெயிலிலேயே வைக்கவும்.
மாலையானதும் மாங்காய்களை மீண்டும் அந்த உப்புநீர் உள்ள பாத்திரத்திலேயே எடுத்து வைத்து மூட‌வும்.
அடுத்த நாளும் இப்படியே அதாவது பாத்திரத்திலுள்ள நீர் முழுவதும் வற்றி, மாங்காயும் நீர் இல்லாமல் வற்றிக் காயும்வரை இதை செய்ய வேண்டும்.
இதற்கு சில வாரங்கள் ஆகலாம்.அதன்பிறகு ஊறுகாயிலுள்ள சதைப் பகுதியை தயிர்சாதம்,கஞ்சி போன்றவற்றிற்கும்,கொட்டையின் உள்ளேயுள்ள பருப்பைக் குழம்பிற்கும் பயன்படுத்தலாம்.
இதில் உப்பு நிறைய சேர்த்து செய்வதால் வருடங்களானாலும் கெட்டுப்போகாது. நன்றாகக் காய்ந்த,சுத்தமான  கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக